தலித் மக்களின் வளர்ச்சிக்கான நிதியை படிப்படியாகக் குறைத்த மோடி ஆட்சி, மாணவர் கல்விக்கான உதவித் தொகையிலும் கை வைத்தது. தலித் மக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்தது.

பட்டியல் இனப் பிரிவு மேம்பாட்டுக்காகவும் நலனுக்காகவும் அவர்களுக்கான மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு துறையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு மிக மிகக் குறைவு என்பதையே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 22.5 சதவீத நிதி ஒதுக்கீட்டுக்கு பதிலாக 2014-15ஆம் ஆண்டுக்கு 8.79 சதவீதம்; 2015-16இல் 6.63 சதவீதமும், 2016-17இல் 7.06 சதவீதமும், 2016-17இல் 8.91 சதவீதமும், 2017-18இல் 6.55 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. மிகக் குறைவாக ஒதுக்கப்பட்ட நிதியும்கூட பட்டியலினப் பிரிவினருக்கு நேரடியாகப் பயன்தரக் கூடிய திட்டங்களுக்கு செலவிடப்பட வில்லை.

ஏற்கனவே அமுல்படுத்தி வரும் பட்டியல் இனப் பிரிவினருக்கான நல்வாழ்வுத் திட்டங்களை செயற்படுத்துவதற்கான நிதியும் மோடி ஆட்சியில் கணிசமாக வெட்டப்பட்டது. தனித்தனியாக நேரடி பயன்தரக்கூடிய திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் 50.69 சதவீதமும், பொதுவான சமூகநலத் திட்டங்களுக்கு 49.3 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதாவது தேவையான முழு ஒதுக்கீட்டில் பாதியளவுகூட ஒதுக்கப்படவில்லை. அது மட்டுமின்றி பட்டியலினப் பிரிவுனருக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு திட்டங்களுக்கு மடை மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து ரூ. 6312 கோடியை நோய் தடுப்புத் திட்டத்துக்கும், 244.50 கோடியை காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கும், ரூ. 857.92 கோடியை சூரிய மின் உற்பத்தித் திட்டத்துக்கும் திருப்பி விடப்பட்டது. இது அப்பட்டமான முறைகேடு. (ஆதாரம் ; நாடாளுமன்றத்தில் 2.1.2018இல் இணை அமைச்சர் விஜய் சாம்ப்ளா தந்த தகவல்)

உயர் கல்வி நிதி வெட்டு

தலித் மாணவர்கள் உயர் கல்விக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2017-18ஆம் ஆண்டு இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் 348 கோடி ரூபாயை அரசு குறைத்துவிட்டது. அதுவும் ஏற்கனவே 51,03,243 தலித் மாணவர்கள் இந்த உதவித் தொகைக் கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சூழலில் ஒதுக்கப்பட வேண்டிய நிதியை மேலும் குறைத்தார்கள். உதவித் தொகைக் கிடைக்காத நிலையில் ஏராளமான தலித் மாணவர்கள் உயர் கல்வியை பாதியிலேயே கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

குடியரசுத் தலைவர் பதவிக்கு ராம்நாத் கோவிந்த் என்ற தலித் வேட்பாளரை நிறுத்தி, தலித் ஆதரவு நாடகம் நடத்தும் மோடி ஆட்சியில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? அவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுகிறதா?

மோடி அரசாங்கம் மத்தியில் மூன்றாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

மிகவும் விளிம்பு நிலையில் உள்ள சமூகத்தினரான, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மதச்சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அவர் களுக்கான முன்னுரிமை என்பது ‘பசு’விற்குக் கொடுப்பதை விட குறைவேயாகும். தலித்துகள், பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து நாட்டிலுள்ள ஊடகங்கள் வாயே திறப்பதில்லை.

2014 பொதுத்தேர்தலின்போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும் கடந்த காலங்களில் அது அமல்படுத்தியுள்ளவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே பாஜகவின் மோசமான ஆட்சியை நன்கு புரிந்துகொள்ள முடியும், ‘பாஜக மனிதர் மலத்தை மனிதர் சுமக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்திட உறுதி பூண்டிருக்கிறது’ என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

ஆனால், இந்த உறுதிமொழிக்கும் எதார்த்த நிலைக்கும் தொடர்பே கிடையாது. உண்மையில், 2017-18இல் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், மனித மலத்தை சுமந்திடும் மனிதருக்கு மாற்று வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு பத்து கோடி ரூபாய் அளவிலிருந்து ஐந்து கோடி ரூபாயாக, அதாவது பாதியாகக் குறைக்கப்பட்டுவிட்டது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் உலர் கழிப்பிடங்கள் 26,07,612 இருக்கின்றன. இதற்கு சுமார் 2 இலட்சம் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் தேவை.

இத்துடன் இரயில்வே மற்றும் பொது இடங்களில் உள்ள கழிவறைகளைச் சுத்தம் செய்வோரையும் சேர்த்தால் இவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். இவ்வாறு மலம் அள்ளும் தொழிலாளிக்கு மாற்றுப்பணி அளிப்பதற்காக ஒரு நபருக்கு ரொக்க ஊக்கத்தொகையாக 40 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்று கணக்கிட்டால், மொத்தம் 800 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால் 2016 பிப்ரவரி 15 வரையிலும் 7,573 நபர்களுக்கு மட்டுமே மாற்றுப்பணி அளிக்கப்பட் டிருக்கிறது. 1,92,427 பேர் மாற்றுப்பணி எதுவும் அளித்திடாமல் நிர்க்கதியாய் விடப்பட்டிருக் கிறார்கள். மோடியின் ‘தூய்மையான பாரதம்’ திட்டத்தின்கீழ் எத்தனை உலர் கழிப்பிடங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன என்பதற்கான தரவு எதுவும் கிடையாது.

தாக்குதல்கள்

‘நாங்கள் (பாஜக) தலித்துகள்/பழங்குடி யினருக்கு எதிரான அட்டூழியங்களைத் தடுத்திடு வதற்கும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்திடுவதற்கும் உச்சபட்ச முன்னுரிமை அளித்திடுவோம்’ என்பது மற்றுமொரு தேர்தல் வாக்குறுதியாகும்.

இவர்களின் ஆட்சியில் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்திருக்கின்றன. உத்தரப்பிரதேசம் மாநிலம், சகரன்பூர் மாவட்டம், சப்பிர்பூரில் நடைபெற்றுள்ள தலித்துகள் மீதான தாக்குதல்கள் என்பது, எப்போதெல்லாம் தலித்துகள் தங்கள் மனிதகுல கண்ணியத்தை உயர்த்திப் பிடித்திட வேண்டும் என்று முயற்சிக்கிறார்களோ அப்போதெல்லாம் சாதி வெறியர்களால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப் படுவார்கள் என்பதற்கான சான்றாகும். தலித்துகள் தங்களுடைய சந்த் ரவிதாஸ் கோவிலில் அம்பேத்கரின் மார்பளவு சிலையை நிறுவிட விரும்பியதே, ஆதிக்க சாதியினருக்கு அவர்கள்மீது ஆத்திரத்தைக் கிளப்பியதற்கான காரணமாகும்.

2017 மே 5 அன்று உயர்சாதி தாக்கூர்கள் மகாராணா பிரதாப் சிலையை நிறுவுவதற்காக ஊர்வலமாகச் செல்லத் திட்ட மிட்டிருந்தபோது, அவர்கள் சப்பிர்பூர் வழியாக வருகையில் தலித்துகள் அவர்களிடம் மோசமாக நடந்து கொள்ளப் போவதாக ஒரு வதந்தி பரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊர்வலத்தில் சென்றவர்கள் வாள்கள் ஏந்தி ஊர்வலமாகச் சென்று, தலித்துகளைத் தாக்கி இருக்கின்றனர், அவர்களின் வீடுகளுக்குத் தீ வைத்திருக்கின்றனர். தலித்து களுக்கு எதிராக அட்டூழியங்கள் நடைபெறும் அத்தனை இடங்களிலும் இதேபோன்ற பாணி திரும்பத் திரும்பப் பின்பற்றப்படுகிறது. மற்றுமொரு கொடுமையான நிகழ்வு என்பது உனா என்னுமிடத்தில் பசுப் பாதுகாப்புக் குழுவினர் என்ற பெயரில் மதவெறியர்கள் மேற்கொண்ட அட்டூழியங்களாகும்.

இறந்த மாடுகளை அப்புறப்படுத்திய நான்கு தலித் இளைஞர்களை அவர்கள் போலீசாரின் தடியால் தெருவில் அடித்தே இழுத்துச் சென்றனர். இதற்கு போலீசாரும் உடந்தையாக இருந்திருக் கிறார்கள். ஒவ்வோராண்டும் நாட்டில் நடைபெற்ற குற்றங்கள் குறித்து ஓர் அறிக்கை உள்துறை அமைச்சகத்தால் தரப்படுகிறது. தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்திருக்கின்றன என்று ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வரும் அதே சமயத்தில், தலித்/பழங்குடியினர் (வன்கொடுமை தடைச்) சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளோ குறைந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்தச் சட்டத்தின்கீழ் 2013ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்குகள் 13,975 ஆகும். ஆனால் இது 2015இல் 6,005ஆக குறைந்திருக்கிறது.

அதாவது 133 சதவீதம். தலித்துகளுக்கு எதிராக அநேகமாக இதர குற்றங்கள் அனைத்துமே அதிகரித்திருப்பாக தரவுகள் காட்டுகின்றன. இதற்கு, தலித்/பழங்குடியினர் (வன்கொடுமை தடைச்) சட்டத்தின்கீழ் வழக்குகளைப் பதிவு செய்வதைத் தவிர்த்திடுமாறு காவல்துறை யினருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதே காரணம் என்று தெரியவருகிறது. இப்படி இல்லை என்றால், தலித்துகளுக்கு எதிராக இதர குற்றங்களின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது அதிகரித்திருக்கும்போது, 2014க்குப் பின் வன்கொடுமைத் தடைச் சட்டத்தின்கீழ் மட்டும் வழக்குகள் திடீரென்று எப்படிக் குறைவாக இருந்திடும்?

2011-2015க்கு இடையே தலித்துகள் மீதான குற்ற நிகழ்வுகள்:

தலித்துகள் மேம்பாடு குறித்து தம்பட்டம் அடித்திடும் பாஜக அரசாங்கம் அரசுத்துறைகளில் காலியாகவுள்ள தலித்துகளுக்கான இடங்களை நிரப்பிட உருப்படியான கொள்கை எதையும் கொண்டு வரவில்லை. காலியாகவுள்ள தலித்/பழங்குடியினர் பணியிடங்களை நிரப்பிட, 2008ஆம் ஆண்டில்தான் கடைசியாக சிறப்புத் தேர்வு நடைபெற்றது. - இரா

Pin It