தொடர்புடைய படைப்புகள்

அன்பார்ந்த நண்பர்களே!

என்றும் இல்லாத புதிய நெருக்கடியை நம் நாடு சந்தித்து கொண்டிருக்கிறது. சமூகநீதி-சுதந்திரம்-சமத்துவம் விரிவுபடுத்த மக்கள்திரள் போராடி கொண்டிருக்கிறது. ஆனால் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரை வழிகாட்டும் சமூகநீதி - சுதந்திரம் - சமத்துவம் - குடியரசை படிப்படியாக குறைக்கும், இல்லாமல் செய்யும் சதிகள் நாளும் அரங்கேறி கொண்டிருக்கின்றன.

சமூகநீதி- சுதந்திரம்- சமத்துவம்- குடியரசு போன்றவை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுக்குள் தானாக வரவில்லை. அவை மக்கள் திரள் போராடி பெற்ற உரிமைகளாகும். இதைதான் அண்ணல் அம்பேத்கார் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரை வழிகாட்டுதலாக வழிவகுத்து கொடுத்தார்.

இன்றைக்கு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் 60 ஆண்டுகளுக்கு பின் என்ன, எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது என்பதை விரிவாக ஆய்ந்து புரிந்து கொள்ள அனைவரும் வாருங்கள்! ஆதரவு தாருங்கள்!

நாள்: 16-03-2019 சனிக்கிழமை 
நேரம்: காலை 10 .00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம்: பி.ஜே. அரங்கம், மெரினா வாளகம், தமிழ்த் துறை , சென்னை பல்கலை கழகம், சென்னை.(தமிழ் துறை இதர மொழித்துறை வளாகம், கண்ணகி சிலை பேருந்து நிறுத்தம், திருவள்ளுவர் சிலை எதிரில்)


சனநாயக உரிமை பாதுகாப்பு பேரவை (OPDR)  நடத்தும்
அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரை வழிகாட்டும் 
சமூகநீதி-சுதந்திரம்-சமத்துவத்தை 
பாதுகாக்கும் மாநாடு

தொடக்க சிறப்புரை: 

மாண்புமிகு நீதிபதி செல்லமேஸ்வரர்
மேனாள் நீதியரசர் உச்ச நீதிமன்றம்டில்லி

Justice Jasti Chelameswar, Retired judge, Supreme Court of India .

சிறப்புரை:
மாண்புமிகு நீதிபதி அரிபரந்தாமன்
மேனாள் நீதிபதிசென்னை உயர்நீதி மன்றம்.

முன்னுரை: 
சிக்குரூபதி பாஸ்கர், தலைவர், OPDR
வழக்கறிஞர் சங்கர சுப்பு, சென்னை உயர்நீதி மன்றம முனைவர் சுப.மனோகரன், பொதுசெயலாளர், OPDR

வரவேற்புரை
வழக்கறிஞர் கிருஷ்ணா, அமைப்பாளர், OPDR
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்
வழக்கறிஞர் கார்த்திகேயன் வழக்கறிஞர் முருகன்
வழக்கறிஞர் பிரசாத் வழக்கறிஞர் விஜயன்

கருத்தரங்க அமர்வுகள்

"மதம் அடிப்படையிலான அரசும் சனநாயக அரசும்"
தலைமை :திரு. ஞான சூரியன்,
சிறப்புரை: பேராசிரியர் அ. மார்க்ஸ்

"சமூக பொருளாதாரத்தின் மீதான தாக்குதலும் அரசியம் அமைப்பு சட்டத்தின் உயர் மதிப்பீடுகள் மீதான தாக்குதல்களும்"
தலைமை: வழக்கறிஞர் விஜயலட்சுமி,
சிறப்புரை: தோழர் தியாகு

"பெண்கள் மீதான அடக்குமுறைகளும் நிலவும் சட்ட சமூகமும்"
தலைமை: திரு. மணிமாறன், ஊடகவியலாளர்,
சிறப்புரை :பேராசிரியர் ரேவதி, பச்சையப்பன் கல்லூரி

"சனநாயகம்சுதந்திரம் - இன்றைய நிலை '
தலைமை:பேராசிரியர் கோச்சடை,
சிறப்புரை: மனிதி செல்வி

(உணவு இடைவேளை: பகல் 1.30 முதல் 2.15 வரை... நண்பர்கள் முன்கூட்டியே பதிவு செய்வது சிறப்பு.. தேவையான உணவு ஏற்பாட்டை செய்ய உதவும்)

நன்றிவுரை: எழுத்தாளர் கி.நடராசன்

அனைவரும் பெருந்திரளாக வருக, ஆதரவு கரம் நீட்டுக!

தொடர்புக்கு: 
வழக்கறிஞர் முனைவர் சுப.மனோகரன்,பொதுசெயலாளர், OPDR
செல்பேசி: 99401 76599, 9840855078

Comments

3 comments

3
கி.நடராசன்
மிக முக்கிய குறிப்பு:
நண்பர்களுக்கு, அலுவலக குழப்படி காரணத்தால் சென்னை பல்கலை கழக வளாகத்தில் நடக்கவிருந்த மாநாடு தவிர்க்க இயலாத காரணத்தால் எழும்பூர் இக்சா மையத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம்.. இவண் சனநாயக உரிமை பாதுகாப்பு பேரவை (OPDR)
கி.நடராசன்
அரசிய அமைப்பு சட்டம் வழங்கிய சுயாதீன உரிமைகள், நெறிகளை ஆட்சியாளர்கள் ஏன் நீதி துறையிடம் இருந்த பறிக்க முயல்கின்றனர்? அதனால் விளைய போகும் தீமைகள் என்ன?
சுதந்தரமான நீதித்துறை ஆட்சியாளர்களின் தலையீட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதா? நீதித்துறை சுதந்தரத்தை, மாண்பை காக்க என்ன சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டும்?
உலகிலேயே மிகப்பெரிய சனநாயக அரசாக அறிவிக்கப்பட்டு உள்ள இந்திய அரசை மத அடிப்படையிலான அரசாக பார்ப்பனீய கோட்பாட்டு இந்துத்துவா அரசாக கார்ப்பரேட்கள் துணையுடன் மாற்றும் முயற்சியின் பேரழிவுகள் என்ன? பல்வேறு பண்பாடுகள், மொழிகள், மதங்கள், பழக்க வழக்கங்கள், ஏற்றத்தாழ்வுகள் கொண்ட இந்தியாவில் மதவாத அரசு சாத்தியமா?
பெண்களை கண்ணியத்தை, சுதந்திரத்தை சட்டமும், சமூகமும் பாதுக்காக்க தவரியத்தின் பின்புலம் உள்ள சனதன-கார்ப்பரேட் பண்பாட்டு தாக்குதல்கள் என்ன?
ஆட்சியாளர்களை விமர்சனம் செய்த படைப்பாளிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். மனித உரிமைகள், சனநாயக உரிமைகள் குழி தோண்டி புதைக்கப்படுகின்றன. இதை அரசியல் அமைப்பு சட்டங்கள் தடுக்காமல் என்ன செய்கின்றன?
ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம் என்ன? இதை சட்டம் தடுக்குமா? மக்கள்திரள் போராட்டங்கள் தடுக்குமா?
எண்ணற்ற கேள்விகளை அதற்கு விடை காண விவாதிக்க வாருங்கள் நண்பர்கள், சனநாயக காவலர்களே!
நீதிதுறை சுதந்திரத்திற்க்காக குரல் கொடுத்த நீதியரசர் செல்லமேஸ்வரர் சென்னையில் கருத்துரை கேட்க அவசியம் அனைவரும் வாருங்கள்!
கி.நடராசன்
அன்பார்ந்த நண்பர்களே ! தோழர்களே ! சனிக்கிழமை 16.03.19 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கம் ஒத்திவைக்கப்படுகின்றது . பல்கலைக்கழக அரங்கத்திற்கு முழு வாடகையையும் செலுத்திய பிறகு இன்று மாலை 4 மணிக்கு நம்மை தொடர்பு கொண்டு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்தனர் .ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் , வழக்கறிஞர்கள் , சமூக ஆர்வலர்கள் பங்கெடுக்கும் அரங்க கூட்டத்திற்கே நெருக்கடி கொடுத்து ,தடுத்து நிறுத்தும் போக்கை வன்மையாக கண்டிப்போம் ...

மனோகரன் ( அகில இந்திய பொதுச் செயலாளர் . ஜனநாயக உரிமை பாதுகாப்புப் பேரவை .. )

கிருஷ்ணா ( மாநில ஒருங்கினைப்பாளர் . ஜனநாயக உரிமைப் பாதுகாப்புப் பேரவை )

Organisation for Protection of Democratic Rights ( OPDR )

Phone no .
+91 99 40 176599

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.