ஒரு முதல் பார்வையில்
சிக்கிவிடாமல்
கொஞ்சம் காலதாமதத்தோடு
வந்தடைகிறது என்னை

தனிமையின் அடுக்குகளை
புரட்டி கொண்டிருந்த
இருள் கவியும் மாலைப் பொழுதில்
வியர்வையின் மினுக்கலோடு
பூக்கிறது என்னிடம்

தட்டப்படும் கதவுக்கு வெளியே
யாருமற்ற ஏகாந்தத்தில்
ஒளிப்புள்ளியாய்
நின்று ஏங்கும் காதலுக்காய்

இறுகியப் படிமப் பாளமொன்று
உருகி வெளியேறுகிறது
என்
இதயத்தின் வெப்பத்தால்..

-இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
கி.சார்லஸ்
அருமையான கவிதை.
அழகான புகைப்படம்.
வாழ்த்துக்கள்
Guest
நன்றி..!
சார்லஸ்..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.