வீட்டுக்குள் நுழையும் வரை
மிச்சமிருந்த மௌனம்
ஒரு கண்ணாடிக் குவளையைப் போல்
பாதமருகே விழுந்து நொறுங்கியது

ஜன்னல் திரைச்சீலை அசைத்து
எட்டிப் பார்த்த காற்று
சொல்வதற்கு ஏதுமில்லையென
திரும்பிப் போயிற்று

மேசை மீதிருந்த
அலங்காரப் பூச்சடிக்குள்
செருகிவைத்திருந்த
பிளாஸ்டிக் பூக்களின் இதழ்கள்
நிறமிழந்து மௌனிக்கின்றன
ஒவ்வொரு முறையும்
என் கோபத்தின் உயரம் கண்டு..

நீ
சுலபமாக சொல்லிவிடுகிறாய்
நம்மிருவருக்கும்
இனி
ஒத்து வராதென்று..

- இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It