நினைவின் அடுக்குகளில்

மடிப்பு கலையாமல்

ஏறிச் செல்கிறாய்..

உன் பாதம்

பட்ட இடங்களில்

பூத்துக் கிடக்கிறதென்

பெண்மை...

---------------

என் இதய பலூனில்

நிரம்பி வழியும் காதல்

உன் ஒற்றைச் சொல்லில்

வெடித்துச் சிதறி

பிரபஞ்சத்தை நிரப்ப

பலூனாகிறது

பிரபஞ்சமும்..

------------------

இலையோடு

மழை பேசும் ரகசியமாய்

என் அலைபேசியோடு

உன் குறுஞ்செய்தி..

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It