மெலிதாக தாரைகள் நெகிழFace

அசைவற்றிருக்கும் நீரை

கிணற்றுக்குள் பார்த்தபோது

அதன் அசையாமை தந்தது

ஆச்சரியத்தையும் ஆசையையும்.

 

சலனமற்ற நீர்த்தட்டில்

என் சலனமற்ற முகம்

என் மூச்சுக் காற்று பட்டு

கலைந்துவிடுமென கவனமாக

மூச்சுப் பயின்றேன்.

 

நிச்சலனம்

நிறைவின் ஆரம்பமா?

முடிவா

 

சற்றே தள்ளியிருந்த பெயர் தெரியா மரத்தின்

மெலிதான பூவொன்று

வீசிய காற்றில் நலுங்கி சுழன்று

என் கண் முன்னாலேயே

என் கிணற்றிற்குள் இறங்க -

 

விழுதலா? நுழைதலா?

 

இன்னும் சில நொடிகளில்

என் முகம் சலனிக்கக்கூடுமோ?

- ரமேஷ் கல்யாண்

Comments

2 comments

2
soumya
Very nice. Enjoyed
R.Venkateswaran
Really excellent, fantastic and a fine piece of Illakiyam... I hope you can write more and more number of poems to enlighten us and create awareness about writing poems. Fine stuff... Hats off to you..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.