ஒரு மதயானையின் நிழல்
என்னைத் தொடர்ந்துகொண்டேயிருந்தது
விளக்குகளுக்கிடையே அகப்பட்ட ஸ்படிகமாய்ச்
குழப்பமடைந்திருந்த நாளில்
தீயசகுனங்களால் சப்தித்தது
தனது வாலைச் சுழற்ற
அதிர்ந்த நட்சத்திரங்கள் உதிர்ந்தன
மெளனம் வேய்ந்த உச்சிவேளைகளில்
பாறைகளை அலறச் செய்தது
விடாய் தீர்க்கப் போகையில்
நதியையே பருகித்
தன்மாமிசம் குலுங்கக் கொக்கரித்தது
தாமரைகள் பூத்த குளத்தையும்
கனவுகள் பூக்கும் இரவினையும்
வண்ணமிழக்கச் செய்தது
இன்று காலைதான் அம்மதயானை
என்னுள்ளே புகுந்தது
நிழல் கரைந்தது
- குட்டி ரேவதி
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இறையாண்மையின் இலக்கணம் புலிகள்
- உடைந்து தொங்கும் மோடி பிம்பம்
- தமிழ்நாட்டின் தனித்துவ அடையாளமான சுயமரியாதை திருமணங்களுக்கு ஆபத்தில்லை!
- ‘தகுதி’ ‘திறமையை’ தோலுரிக்கும் ராகுல் காந்தி
- ஆலயத் தீண்டாமையை அகற்றுவோம்!
- காணாமல் போகும் கழுகுகள்
- ஊழல்... ஊழல்... பாஜக ஆட்சியில் எல்லாமே ஊழல்!
- மசூதிகளை குறிவைக்கும் மலிவு அரசியல்!
- காதல் தாண்டவம்
- சர்க்கார் காங்கிரசைவிட மோசமானதா?
- விவரங்கள்
- குட்டி ரேவதி
- பிரிவு: கவிதைகள்
செய்யுள் அப்படினு சொல்லக்கூடிய ஒன்னு என்றால் அது இது தான்
எனக்கு கவிதை அப்படினு சொல்லுறதில் உடன்பாடு இல்லை
மண்ட காய்ஞ்சு போய் இன்னைக்கு ஒரு நல்ல செய்யுள படிச்சிறமாட்டோம ா அப்படினு சல்லட போட்டு தேடினேன்
இப்ப நிம்மதியா போய் உறங்குவேன்
நன்றி
RSS feed for comments to this post