
காதலைப் போலிருக்கிறது.
ஆதாரமாக!
சோற்றில் மண்ணைப் போடுபவனும்
சில பொழுது
மனம் திறப்பதுண்டு:
"மண் தான் சோறு போடுகிறது".
நிறையவே இருக்கின்றன
நறுமணத் திரவியங்கள்.
மனம் பூசிக்கொள்வதோ
மண் வாசனையைத் தான்.
மலர்ப்புன்னகை மர்மத்துடன்
மரம்
மவுனமாய் தலையாட்டிநிற்க..
மனிதன் சொல்லிக்கொள்கிறான்
'மண்ணின் மைந்தன் நான்!'
இருந்தும்........
'மண்ணாய்ப் போ...'வதை
வசவாகத் தான்
வைத்திருக்கிறான்.
- இப்னு ஹம்துன்