கீற்றில் தேட...


Soilகாலங் காலமாய் அது-
காதலைப் போலிருக்கிறது.
ஆதாரமாக!

சோற்றில் மண்ணைப் போடுபவனும்
சில பொழுது
மனம் திறப்பதுண்டு:
"மண் தான் சோறு போடுகிறது".

நிறையவே இருக்கின்றன
நறுமணத் திரவியங்கள்.
மனம் பூசிக்கொள்வதோ
மண் வாசனையைத் தான்.

மலர்ப்புன்னகை மர்மத்துடன்
மரம்
மவுனமாய் தலையாட்டிநிற்க..
மனிதன் சொல்லிக்கொள்கிறான்
'மண்ணின் மைந்தன் நான்!'

இருந்தும்........

'மண்ணாய்ப் போ...'வதை
வசவாகத் தான்
வைத்திருக்கிறான். 

இப்னு ஹம்துன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.