கேட்கிறாள்
'அந்த கடிதம் கிடைச்சிச்சாங்க?'
அவள்
எதிர்பார்க்கும் விடை
என்னிடமில்லை இப்போதும்.
அக்கடிதத்தின் முக்கியத்துவத்தையும்
இழப்பின் வலியையும்
எப்படியுணர்வார்கள் அவர்கள்
எப்படியும்
என்னிடம்
சேர்த்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை
அவளுக்கிருந்திருக்கலாம்.
காப்பாற்றும்
கடமையுணர்வு
இந்திய அஞ்சல் துறைக்கோ
அமீரக அஞ்சல் துறைக்கோ
இல்லாமல் போனதற்கு
நானென்ன செய்துவிட முடியும்
கவிதை ஒன்று எழுதலாம்
காணாமல் போன கடிதம் பற்றி.
- இ.இசாக், துபாய் (