விழுந்தன மரண அடிகள்
பெருவலியின் வேதனைகளை
கீரிடங்களைச் சரிசெய்யும் சாக்கில்
சமாளிக்கின்றன.
அக்கம் பக்கம்
யாருமில்லையென்பதை
உறுதி செய்துகொண்டு
வேகமாய் வருகின்றன
வீர முழக்கங்கள்.
எப்போதும் புறமுதுகிட்டு
ஓடத்தயாராயிருக்கும்
ஓடுகாலிகளே...
முதுகெலும்பற்ற
புழுக்களான உம்மோடு
போரிட அல்ல
என் வீரம்.
- முத்துக்குமரன், துபாய் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.