womanநாள்தோறும்
பூ வாங்கும் கடையில் 
தானாகவே நிற்கிறது
எனது வாகனம்.

நினைவுகளில் 
நீ இருப்பதால்
நீ ஊரில் இல்லை
என்ற ஞாபகம்
எனக்குத்தான் இல்லை.
என் வாகனத்திற்குமா?

கொட்டிக் கிடக்கும்
கோடிப் பூக்களை
ரசிக்கவில்லை மனது

எத்தனை மலர்கள்...
எத்தனை நிறங்கள்...
அத்தனை பூக்களும்
அழுவது போலவே
இருக்கிறது.

பூக்கள் மீண்டும்
சிரிக்க வேண்டும்
உடனே
ஊர் திரும்பி வா!

கோவி. லெனின்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.