காலை
இரண்டு இட்டிலி ஒரு தேனீர் என
பசியாற்றும் காசை
மிச்சம் செய்தே
திரையரங்கு சென்று படம் பார்க்கிறோம்

கூடுதல் நேரம்
மகிழ்வுந்தோ கழிவறையோ தூய்மை செய்த
காசை சேமித்தே
ஒலி நாடாவோ
ஒலி ஒளி குறுந்தகடோ வாங்கித் தீர்க்கிறோம்.

கடன்
அடைப்பதற்கென்று வந்தாலும் கூட
கடன் வாங்கி
அரங்கு நிறைத்து
கொட்டி தந்து மகிழ்ந்திருக்கிறோம்.

அப்படியிருந்தும்
எதுக்கு
திரைப்படத்துக்கு தமிழ்
என்று தான் குலைக்கிறது
நட்சத்திர நாய்கள்!



இ.இசாக் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.