வரலாற்றுபேதமின்றி குழந்தையை
வளர்த்துவிட முடியுமானால்
அர்த்தம் புரியாமலே
எல்லாப் பண்டிகைகளையும்
கொண்டாடத் தயாராகிவிடுகிறது அது
நாமும்
Iray childநமது ஒவ்வாமையை தெரிவித்துக்கொண்டே
குற்றவுணர்ச்சியின்றி
குழந்தைக்காகவென்று கொண்டாடத் துணியலாம்
சராசரிக்கும் மேலானவரென்ற
அலட்டலை குறைத்துக் கொள்ளாமலே
மந்தையிலொரு மறியாடாய் இழியலாம்
தீபாவளியென்று பட்டாசு வெடிப்பதைப் போல.

ஆனாலும் இப்போது
பட்டாசு வெடிப்பது
கொண்டாட்டத்திற்கானது மட்டுமல்ல
பயிற்சியும்கூட
வேட்டுச்சத்தத்திற்கு மருளாமல்
வளருமொரு குழந்தையால்தான்
இடிவிழுந்தாலும்
தேமென்றிருக்க முடியும் பிராயத்தில்
இல்லையானால்
சின்ன சத்தத்திற்கும்
உயிர் பதைத்து மாளும்
ஈராக் குழந்தைகளைப் போலாகிவிடும். 

ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.