Rumourவெறுமனே ஒரு
செத்த புழுவாய்த்தானே
வெளியேறியது
ஓர் அரை நொடிக்கு முன்

இறக்கை
எப்படி முளைத்தது
வர்ணங்கள்
எப்படி வந்தன இப்போது

அடடா...
வெற்றித் திலகங்களை
நெற்றியில் அணிந்து
வெளியேற்றியவனிடமே
விரைந்து வந்து நின்று
என்னமாய்ச்
சிறகடித்துப் பறக்கிறது
இந்தப்
பொய்யெனும் பட்டாம்பூச்சி 

புகாரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It