
சாளரம் நீ திறந்து வைத்தாய்
காற்றை அனுபவிக்கச் செய்தாய்
புது உலகம் கண்டுகளிக்கவிட்டாய்
எங்கு சென்றாய்
எதிலும் உனைத்தேடிடும்
ஏந்திழை விடுத்து
கண்கள் வேலைநிறுத்தம் செய்கின்றன
செவிகள் செயல்படுவதில்லை
ஐம்புலன்களும் வஞ்சிக்கின்றன
வார்த்தை தவறிவிட்டதாய்
இங்கும் அங்கும் எங்கும்
அனைத்திலும்
அனைத்திலும்
அனைத்திலும் நீ
நீ நீ நீ
மாந்தரின் மகிழ்வை மட்டுமே
மனமகிழ்ந்து விரும்பும் நீ
மனம் விரும்பி
மனம் மகிழ்விக்க
வரும்நாள் எந்நாள்
வருமா அப்பொன்னாள்
- மதுமிதா (