எண்ணப்புலனின் பெருஞ்சுவற்றில்
முட்டி மோதி உடையும்
கருத்துச் செறிவே!

பிரவேசிக்கிற கணத்தில்
கைக்கெட்டா காதலாய்
கனிந்து நிற்கிறாய்

எடுத்துண்ண இயலா ஊணை
கண்களில் காட்டி
உதட்டை ஈரமாக்குகிறாய்
நாவால்.

மதிலேறி உட்புகுந்து
மனதடைய வேண்டுமெனில்
மனிதம் ஒதுக்கும் நின்னை
மாண்புமிகு கருத்தே!

தேடிப் புணரவைத்தல்
கலைஞனுக்கழகல்ல.
கடைவிரித்துக் காத்திரு
அன்றி
பத்தினி வேடமிட்டு
பகலில் உறங்காதே!

ஆதவா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.