
கட்டுப்படாத என்மனம்
உணவாக உட்க்கொண்டது
உன் நினைவை
மட்டும் தான் பெண்ணே...
சினங் கொண்டு
சித்திரமாய் நீ முறைத்த
பார்வையிலும் கூட
அதை ரசித்து மனம்வெதும்பி
சிரித்தேனே பெண்ணே.......
தினமும் உன்னை
தித்திக்க நினைத்துவாழ்
உயிரினமாய் நான்,
எப்பொழுது மாறினேன்
தெரியவில்லை பெண்ணே....
எனக்காக என் வாழ்வில்
நீ தந்த மாற்றங்கள்
உனக்காக என் வாழ்வை
தர நினைத்தால் ஏமாற்றங்கள்..
மனக்கணக்கு விதியை
யாரேனும் மாற்றுங்கள்....
மாற்றம் ஒன்றே
மாறாதது..
மார்க்ஸ் சொன்னது
பொருந்தாது...
- க.அருணபாரதி (