பாவப்பட்ட கிராமத்திலிருந்து
பேருந்தின் மனித நெரிசலில்
பைக்குள் சில ரூபாய்களுடன்
பயணித்து பட்டணம் வந்தவன்

வாயைத் திறக்க விடாத பயம்
வாழ்வின் முதல் வான் பயணம்
ரப்பர் செருப்புகள் கால்களில்
ரகசியமாய் கனவுகள் மனதில்

பாலையில் பலமணி வேலைகள்
பழிவாங்கிட விடியும் காலைகள்
எரிக்கும் கொள்ளி சூரியன்கள்
என்றோ மறைந்த மகிழ்ச்சிகள்

அவன் முகம் காணாது நண்பர்
அறைக்கதவை உடைத்திட்ட
அன்று, உயிர் அற்ற உடலாய்
அமைதி தவழ்ந்தவனாய் அவன்

புழுதிப்புயல் பல தாங்கியவன்
புதுப்பணத்துக்கு ஏங்கியவன்
புறப்பட்டான் பிறந்த ஊருக்கு
புதுவிதமாய்.. படுத்துக்கொண்டு!


பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.