மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு

புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் ஆனாலும்
மருளாட

கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்
உளிப்பட்ட காயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர்தந்தவன் மட்டுமல்ல
உழைத்து உண்பவன்
நல்லவன் அவன் என்பதாலும்

“பகவானே அப்ப நான்?”

நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய
Pin It