Loverஉருண்டு விழும்
உன் கண்ணீர் துளிகள்
கவலையின் அளவைக்
கணக்கிட்டு
சொல்கின்றன.

அடுத்த முறை
கண்ணீர் காணநேர்ந்தால்
அது ஆனந்தத்தின்
அளவுகோலாக
இருக்கட்டும்.

கவலைப்படுகையில்
பாறாங்கல்லாய் இறுகும்
மனது
அழுது முடிந்தபின்
பறவையாகிவிடுகிறது.

நீயும் பறவையாக
வேண்டும்

நீ பறப்பதற்காகவே
எப்போதும்
பகலாக்கி
வைத்திருக்கிறேன்
என் வானத்தை.

கோவி. லெனின்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.