காற்றினுள் சிறு கீற்றெனப்
பறந்து சென்றது மாலைவேளை

Sun setவார்த்தைகள் இறுகிக்கிடந்தன
வீழ்ந்த எரிநட்சத்திரம் குளிர்ந்ததைப்போல்

உணர்வுகள் பேதலித்துத் தவித்தன
பாத்திரத்திற்குள் தவறி விழுந்த பல்லியினும்
அதிகமாய்

பிரபஞ்சத்தின் இறுதிமலரைப் போன்ற
பாவனையுடன் உதிர்ந்தது
அம்மலர்

இப்படியாக நெருங்கும் இரவின்
அசைவைப் பார்க்கையில்
காலம் ஒரு சிறகெனக் கனக்கிறது

குட்டி ரேவதி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.