எனக்கு நிலவைப் பிடிக்கும்.
அவளுக்கு நட்சத்திரங்களை...

Indian wifeநான் கவிதை எழுதுவேன்.
அவள் கணக்கில் புலி...

நான் வண்ணத்துப்பூச்சிகளோடு
பேசிக்கொண்டிருப்பேன்.
அவள் கேபிள் டிவியில் மூழ்கி இருப்பாள்...

நான் பனிமழை பொழிகிறதென்று
வேடிக்கை பார்க்க அழைப்பேன்.
அவள் வீடு நனையாமலிருக்க
கதவை சாத்துவாள்...

நான் மெதுவாய் மலர்த்த நினைப்பேன்.
எல்லாவற்றிலும் அவசரம்தான் அவளுக்கு...

இத்தனைக்கும் நான் தான் உயிரென்று
நூறு தடவை தாலியை தடவிக்கொள்வாள்...


சரவணன்.பெ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.