எனது நிழலாய் வருகிற உன் மேல்
நான் கொள்ளும் வெறுப்பையும்
அதையும் மீறிய உன் நேசமும்
இணையும் நேர்கோடுகளில்
உயிர்த்திருக்கிறது நம் நட்பு
...
வாளெடுத்து சொற்களாய் வீசும்போதெல்லாம்
லேசாய் சிரித்து அதிர வைக்கிறவன் நீ
...
நானோ வெறும்காற்றில் கைகளை வீசி
என்னையே வீழ்த்திக்கொள்கிறேன்
..
உன்னைப் புதைத்துவிட்டு உனதன்பை மட்டும்
பெறமுடியுமென குழி வெட்டி காத்திருக்கிறேன்
...
மஞ்சள் பூக்கள் உதிர்ந்த சாலையில்
கண்கள் பனிக்க விடைபெற்றாய்
..
இன்னும் அலைகிறேன் நல்லதொரு நட்பிற்க்காக
..
- சரவணன்.பெ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- சரவணன்.பெ
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post