மாய மந்திரங்கள் மிகைத்த வாழ்வின்
loverசுடரேற்றி வெளிச்சம் தந்த உன்னில்
காற்றைத் தூவி அணைத்திடத் துணியா
தேங்கிக் கிடக்கும் நீரில்
நீராடும் சிறு குருவியொத்த மனதுன்
காதல் கலந்து நிறைத்த மொழிகளை
எண்ணிச் சிலிர்த்து வாழ்கிறது

காதலின் நாளதைக் காவலுக்கு வைத்து
நீலத்தினொரு சாயலோடு சிவந்திருக்கும்
பொன்னந்தி மாலையொன்றிலுன்னழகிய
விரல்கள் கோர்த்து ஒளிரும்
வான் தாரகைகளின் தூரம்வரை
நாமிருவரும் நடந்தபடி
உன்னினிய வார்த்தைகளை
மின்னல் துண்டுகளின்
பிரகாசத்தோடான சிணுங்கல்களை
கேட்டிடும் ஆவலை இன்றும்
எழுதிக் காத்திருக்கிறேன்

எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.