மாய மந்திரங்கள் மிகைத்த வாழ்வின் சுடரேற்றி வெளிச்சம் தந்த உன்னில் காற்றைத் தூவி அணைத்திடத் துணியா தேங்கிக் கிடக்கும் நீரில் நீராடும் சிறு குருவியொத்த மனதுன் காதல் கலந்து நிறைத்த மொழிகளை எண்ணிச் சிலிர்த்து வாழ்கிறது காதலின் நாளதைக் காவலுக்கு வைத்து நீலத்தினொரு சாயலோடு சிவந்திருக்கும் பொன்னந்தி மாலையொன்றிலுன்னழகிய விரல்கள் கோர்த்து ஒளிரும் வான் தாரகைகளின் தூரம்வரை நாமிருவரும் நடந்தபடி உன்னினிய வார்த்தைகளை மின்னல் துண்டுகளின் பிரகாசத்தோடான சிணுங்கல்களை கேட்டிடும் ஆவலை இன்றும் எழுதிக் காத்திருக்கிறேன் - எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ!
- ஆர்.என்.ரவிக்கும் சீமானுக்கும் கால்டுவெல் மீது கோபம் ஏன்?
- தேர்தல் ஆணையத்தை காணவில்லை!
- ராகுல் - மோடி நேரடி விவாதம்
- கொள்ளைக்காரர்கள், காட்டின் பாதுகாவலர்களாக மாறிய கதை
- சிறு மழைக்கு காத்திருக்கிறேன்
- நானமர்ந்த இரகசியக் கூடு
- சு.ம. திருமணமும் பு.ம. திருமணமும்
- பெரியார் முழக்கம் மே 16, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கடவுள், மதம் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும்!
- விவரங்கள்
- எம்.ரிஷான் ஷெரீப்
- பிரிவு: கவிதைகள்