man
நர்சரி படிக்கும் மகன்
இன்று விளையாட தேர்ந்து கொண்டது
நான் வாசிக்க வைத்திருந்த
கவிதைப் புத்தகங்களில் ஒன்றை.

தொலைதூர பயணமொன்றில்
டேப் ரெகார்டரில் ஒலித்த
பாடலின் வரிகள்
எங்கோ படித்த கவிதை வரிகளின்
இன்னொரு வடிவம்.

முதல் முதல் பார்த்த
தோழியின் கணவரிடம்
சகஜமாக உரையாட முடிந்தது
என் முதல் கவிதைத் தொகுதியை
முன்வைத்து.

மகன் பிறந்த நாள்
கொண்டாண்டத்தின் இடையில்
நண்பனின் மனைவி ஒருவர்
நான் எழுதிய கவிதை ஒன்றை
வரி மாறாமல் சொல்லி
வாழ்த்தியது பாராட்டுமுகமாய்.

நிகழ் கணங்கள் யாவிலும்
நிறைந்து நடை பயிலும்
கவிதையின் கால்தடங்கள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.