writing
கண்ணில் தளும்பும்
தூக்கம் கன்னம்
தாண்டி வழிகிறது.

இருட்டுப் பிரதேசம் ஒன்றில்
தொலைக்கப்பட்டவனாய்
முழிக்கிறேன்.

இமைக்கும் தோல்
பூர்த்திப்பது
அரை சென்டிமீட்டர்தான்
என்றபோதும்
அத்தொலைவு
கடக்கப்படாமலிருப்பதன் வலி,
முழு முகத்தையும்
சுருங்கி விரிந்து
சோம்பல் முறிக்கச் செய்து,
இறுக்கி மூடித்
திறக்கும் விழியை
செங்குளத்துக் கருமீனாய்க்
காட்சிப் படுத்துகிறது.

அறை முழுதும்
வெள்ளை
வெளிச்சப் பிரவாகம்.
கூசும் கண்ணின்
மூடத் துடிக்கும்
கடையடைப்பிற்கு
எதிர்க் கட்சிபோல்
பேராதரவளிக்கிறது.

தேய்த்தெடுத்த கண்ணினின்று
சிந்துகிறது செந்தூரம்
இரு கையிலும்.
உடன் தூக்கமும்.

மடியிருக்கும் சதுரக்
கணிப்பொறி சொல்லுகிறது.
எழுதுகிறேன் பேர்வழியென்று
நான் நள்ளிரவில்
தூங்காது,
தூங்கி வழிந்த
கதைதன்னை.

மதன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.