ஊரே மறந்த கதையொன்றை
உள்ளம் பதற சொல்ல வந்தேன்
பாரே புகழும் அகிம்சை மண்ணின்
பாவக் கதையொன்றை சொல்லவந்தேன்
தவமா தவமிருந்து நான் பெத்தப் பிள்ளைக - எங்க
தவத்துல துளுத்து வந்த கொழுந்து மல்லிக
சவமா கிடக்குதிப்போ பூமியிலே - இதை
சகிச்சுக் கிடப்பதும் சாமிகளா?
(ஊரே)
ஆலா விழுதிறங்கி அருகுபோல் வேரோடி
நாலா திசையுமெங்கள் நரம்பா கிளையோடி
வாழையடி வாழையா வாழப்பொறந்த பாதியில
(ஊரே)
அப்பன் ஆத்தா எங்களாட்டம் அடிமையா வாழ வேணாம்
ஆண்ட வூட்டு தொழுவத்துல சாணியள்ளி மாள வேணாம்
சாதி வெஷந் தீண்ட நுரை தள்ளிச் சாகாம
தாவித் தப்பியோட தங்கங்கள படிக்க வச்சோம்
(ஊரே)
படிச்சும் பலனில்லே பாவி மக்க பூமியில
அடிச்சே கொன்னாங்க கயர்லாஞ்சி வீதியிலே
தன்னந்தனி மரமா நான் கதறி அழுஞ்சத்தம் - இந்த
புண்ணிய பூமியைத்தான் புதைக்குழிக்கு தள்ளாதோ
(ஊரே)
எம் பொண்டுபுள்ள பொனம்தொட்ட புழுதி பறந்துவந்து
அவங்க கண்ணப் புடுங்காதோ கருவறுக்கப் பாயாதோ
வெம்பி அழும் எனது வேதனை சுடுமூச்சில்
வெந்து அழியாதோ வெங்கொடுமைச் சாதி மனம்
(ஊரோ)
- ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இதற்குப் பெயர்தான் சமூக நீதியா?
- குடிஅரசு 100
- பூமியில் வந்து விழும் உயர் ஆற்றல் துகள்கள்
- ஜூன் 4, வரலாறு மாறும்!
- குறிச்சி என்பது?
- பரப்புரை பயணக் காட்சி - பாசிசம் வீழ்வதற்கான சாட்சி
- எச்சங்களிலான நிலம்
- ஜன நாயகமா? பண நாயகமா?
- கருஞ்சட்டைத் தமிழர் மே 04, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- விவரங்கள்
- ஆதவன் தீட்சண்யா
- பிரிவு: கவிதைகள்