Loveகுளிர் காலையின்
மஞ்சள் வானத்தினூடாக எழும்பி நிற்கும்
உன் தேசம் கடந்துவந்த சூரியன்,
மலைச்சரிவின் எங்கும் பரவவிடுகிறது
இதம் நிறைந்த உன் நேசத்தின் வெம்மைகளை..
இரவெல்லாம் பொழிந்த
என் பிரியம் தாங்கிய பனித்துளிகள்
உருகிச் சொட்டுகின்றன இப்பொழுதில்!

பூக்களுடன் செழித்திருக்கும்
இப்பெருவெளியின் புல்வெளியினூடே
முட்டிகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்தபடி
உன்னை நினைத்திருக்கிறேன்
எதிரே தெரியும் மலைப்பாதையில்
தரையிறங்கும் ஆட்டுமந்தையாய்
மென்மையாய் வழிகிறது உன் பாடல்!

நட்புடன்,
கோகுலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.