துப்பாக்கி முனைகளில்
அடகு வைக்கப்பட்ட
Refugees
எங்கள் வாழ்க்கையை
நினைந்து
ஒரு போதும் வருந்தவில்லை

தந்தை கொல்லப்படும்போதோ
நண்பன் கடத்தப்படும்போதோ
இவ்வளவு வருத்தம்
எனக்குள் எழுந்ததில்லை

என் வீட்டில்
பதிந்திருந்த
சநதேகக் கண்காணிப்போ
பசியின்
கோரப்பிடிக்குள்
சிக்கித் தவித்த
நரக நிமிடங்களோ

என்னை இத்தனை தூரம்
அழவைத்ததில்லை

பெயர் தெரியாத
தெருக்களில்
அகதிகளாய்
மண்வாசனையை
தேடும்போதுதான்
உயிர் கருகுகிறது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.