முயல்
பசு
எலி
யானை
மனிதன்
எது பற்றியும் அலட்டலில்லை..

மரம்
செடி
கொடி
வேர்
தொடர்கிறது வேட்டை..

இரவு
பகல்
மழை
வெயில்
வெளுத்து வாங்குகிறது வேட்டை

நீ
நான்
அவன்
அவள்
அனல் தெறிக்கிறது வேட்டை..

ஜாதி
மதம்
இனம்
குலம்
கும்மாளமாய் வேட்டை..

பணம்
பதவி
அதிகாரம்
ஆணவம்
அமர்க்களப்படுத்தும் வேட்டை..

எல்லாமும் முடிந்தபின்னே
தொடரப்போகிறது
அவர்களை அவர்களே
அவர்களால் அவர்களுக்கிடையில் வேட்டை..

இது வேட்டையர்கள் காலம்

- நிந்தவூர் ஷிப்லி

Comments

1 comment

1
Neethimalar
Nice

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.