பிரியங்களின் வழியே
பொறுமை பூக்கும்
நதியோரக் கரைகளில்
கொலுசொலியை
புலம்ப விடாதே
*
இதை ஒரு பழக்கமாகவே
வைத்திருக்கிறேன்
தினம்
ஒரு
புதிய முகத்தையாவது
மனதில் பதிய வைப்பது
*
குட்டி வந்தாதான்
குரல் எழும்புகிறது
யாருமே ஏறாத
ஒற்றைப் பாலத்தின்
முது குரல் கேட்கிறது
வலிக்காமல் அமர்கிறேன்
*
வயிறு நிறைந்தவன்
வாக்கிங் போகிறான்
வயிறொட்டியவன்
வாழ்வை
இழுத்துக் கொண்டிருக்கிறான்
- கவிஜி