கீற்றில் தேட...

சுயம் சுமை போல
தோன்றுவது இயல்பு
இயல்பில் நகர்தல்
இருத்தலின் இயைபு
தூரங்கள் எதுவோ
தோகைகள் சோர்வுறவில்லை
உயிர்த்துக் கொண்டிருக்கும்
இசையென
இதயத்தின் ஓசை
மயங்கலாம் எதிர்காலம்
மதி கொண்டு நிகழ்வது
என் காலம்
ஒளியோ இருளோ
உள்ளோவியம்
உணர்ந்து கொள்ளும்
பாதைகளை உருவாக்கும்
பாதங்களே துணை
தத்துவங்கள் நதி போல
நகர்ந்து கொண்டிருக்கிறேன்
நான் ஆக

- கவிஜி