விட்டுச் சென்றதை
எடுத்துப் பார்த்தேன்
உன்னுடையக்
கைக்குட்டையாயென்று.
எடுக்கும் முன்னே
உணர்ந்து கொண்டேன்
உன் வியர்வை நறுமணத்தை
உணர்ந்தவன் என்பதால்.

யாரோ, நானென்று
அலட்சியத்தால்
தொலைத்திருக்கலாம்.
கைக்குள் இருப்பது
சிறையென்று அவை
எண்ணியிருக்கலாம்.
இல்லை,
எண்ணியதோடு நில்லாமல்
தப்பிக்க குத்திருக்கலாம்.
குதித்ததில் காயமடைந்து
சாலையோரத்தில்
கேட்பாரற்று
கிடைந்திருக்கலாம்.

இவையெல்லாம் நடந்திருக்கலாம்
நடக்காமலும் இருந்திருக்கலாம்.

யாருக்கு தெரியும்
அந்தக்
கைக்குட்டையைத் தவிர,

இப்பொழுதும்
அந்த கைக்குட்டையோடே
அங்குதான் இருக்கிறேன்.
பருவங்கள்
மாறி மாறி வருகிறது
ஆனால்,
யாருமே வரவில்லை
எங்களைத்தேடி.

- துங்கன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.