சாயங்காலம்
மிகவும் பலகீனமாக
மடிந்து கொண்டிருக்கும் போது
மேகங்கள் கிழிந்து தொங்கும் திரைச் சீலைகள்
நட்சத்திரங்கள் ஒட்டுப்போட்ட பாவாடைகள்
அத்துமீறி கத்தும்
இரவுப் பூச்சிகளுக்கு பயந்து
வாலை சுருட்டி குழைந்து கொண்டு
விடைபெற்றுக் கொண்டிருக்கும்
இது போன்ற ஒரு அரூபமான பொழுதில்
நீ என் ஞாபகத்திற்கு வருவது
இது எத்தனையாவது முறை சொல்
- தங்கேஸ்