மேடு பள்ள வழிகளை
பெரிதும் விரும்புகிறேன்
பாறை ஏறி நீரில் இறங்குவது
பிடிக்கிறது
தொலைந்து விடுதலின் மகத்துவம்
கிடைத்து விடுதலில் இல்லை
ஏதேதோ புரிகிறது
ஒவ்வொரு முறையும் உணர்கிறேன்
துருவம் எங்கே மறக்கிறேன்
இலையும் அசைவும் மனதுள்
இதயம் மீட்டும் பூங்குருவிகள்
மரம் பேசும் அருவி பாடும்
அரூப அசைவென
வந்து போகும் யாகமென
ஒரு கூடு விடுதலின் நிம்மதி
வனமெங்கும்
இதோ இம்முறையும்
இப்படி கண் விழித்தபடி
முணுமுணுத்தபடி
மலை ஏறுகிறது ஒரு பெருந்தவம்...!

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.