காடோடி நாடோடி
பரிணாம வளர்ச்சியில்
வீடு கட்டி ஓரிடத்திலுறைந்து
திண்ணையைத் தனக்கொதுக்கி
வெற்றிலையை வாயிலதக்கி
ஊர்க்கதையைத் மென்று தின்று
அடுக்களையைப் பெண்களுக்கு
தள்ளிவிட்டதில் இன்னமும்
இறக்கப்படாமலேயே இருக்கிறது
ஏற்றப்பட்ட சிலுவை

புதியதாக வாங்கப்பட்ட
வில்லாவில் உனக்கான
மாடூலார் கிச்சனைப் பார்
என்றவாறு சிலுவையில்
ஏற்றப்படுகின்றன
மென்ணாணிகள்

ஞாயிறந்தி
ஈருருளியில் சுற்றி
இரவுணவை உணவகத்தில்
கழிக்கலாமென்பதில்
சிலுவையின் ஆணிகளிலிருந்து
புறப்படுப்படுகிறது
அருட்பெருங்கருணை!

- பா.சிவகுமார்

Pin It