அறியவகையாய் கண்டறியப்பட்ட அரிதாரத்தை
கைகளில் திணிக்கிறேன்
அதை அள்ளியோ அன்றி
அதனொடு சேர்த்து குழப்பி
அப்பிக் கொள்ளுங்கள் தலைமயிரில்...
நிறம் மாறப்பட்ட மயிரில்
ஒளித்திருப்பதெல்லாம்
கடத்தப்பட்ட தந்திரங்கள்
உள்ளிடப்பட்ட உத்திகள்
புதிதாய் முளைத்து
வட்டி தரும்
வால்நட்சத்திரங்கள்
கனிந்தேயிருங்கள்
இங்கே ஒரு செம்பருத்தி
பூக்கத் தொடங்குகிறது...

- கருவை ந.ஸ்டாலின்

Pin It