கண்கொள்ளும் அளவு
நீல நிற வானம்
தேவையைத் தீர்க்கும்
கார்மேகம்
விரல் நூலில் கட்டிமுடிக்கும்
ஒரு முழம் நட்சத்திரங்கள்
காற்றில் எழுதும் இறகு
இறகு எழுதிச் சென்றவரை காற்று
கைப்பிடி அளவு கடல்
நடந்து செல்லும்
தூரம்வரை மணல்
துளிர்த்துக் கொண்டே
இருக்கும் அன்பு
பார்வையின் எல்லை வரை
கைப்பிடி அளவு மலை
பசுந்தரை
சூரிய இரவுகள்
காதலிக்க நிலவு
ஈரம் காயாத இதயம்
அன்பிற்கு ஒரு நாய்
கவிதைக்கு ஒரு பறவை
நடந்து செல்லும் தூரம் வரை
திகட்டாத அன்பு
புத்தனின் கண்கள்
ஆசையற்ற ஆசை போதும்
தீர்ந்து விட்டது இந்த வாழ்வு.

- ப.தனஞ்ஜெயன்

Pin It