குளத்தைப் பார்த்து
அமர்ந்திருந்தேன்
அழகான மீனொன்று
துள்ளித் திரிந்தது
எப்பொழுதும் அவ்வளவு
அமைதியாக இருப்பதில்லை
குளம்.

நீரலைகள் மலர்ந்து
கரைதொடும் அழகில்
தடம் பதித்து என் கால்கள்
மீனுக்கு நாரைகள் இல்லையென
புரிய வைக்கும் முயற்சியில்
சட்டென்று மீன்கொத்தியானது
ஒரு பறவை
என்னை ஒரு கண்ணிலும்
குளத்தை மறுகண்ணிலும்
தூக்கிச் சென்றது மீன்.

- ப.தனஞ்ஜெயன்

 

Pin It