வரிசையில் நிற்பவர்
அதட்டியபோதும்
சிட்டுவென துள்ளியாடினாள்...
பூங்காவின்
இரும்புவட ஊஞ்சலில்

மாவின் தடித்த கிளைநுனியில்
தூக்கணாங்குருவியென
தாளூன்றி எம்பியாடினாள்...
போதுமென்று தாயார்
மிரட்டியபோதும்

மஞ்ஞையின் நீள்வால்போல்
தாவணி உலைய,
பிணைத்த
ஆலவிழுதில் ஆடினாள்...
தோழியர் கெஞ்சியபோதும்
இறங்காமல்

நிறைவேறாக் கனவை
மனதாலும்,
தூக்கிக் கட்டப்பட்டு
தூசு படியத் தொங்கும்
நாலடி தேக்கு ஊஞ்சலை
விரல்களாலும்,
வருடியபடி
இல்லம் திரும்புவர்களுக்காக
காத்திருக்கிறாள்
தன் தனிமைக் கருவறையில்

- கா.சிவா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.