இத்தனை மணங்கள் 
எனைச் சூழ்ந்துள்ளன என்பது என் நறுமணம் 
விலகியபோதே தெரிகிறது

இத்தனை சுவைகள்
உள்ளதென 
எனது தேமதுரம் இல்லாதபோதே தெளிகிறது

உலகம் எவ்வளவு 
பெரியதென்பது 
என் உலகம் தொலைந்தபோதே புரிகிறது

பல்லாயிரம் சிற்றுயிர்கள் விழியில் படுகிறது 
என் பேருயிர் சென்றபின்னே

என் ஒளி அணைந்ததாலேயே 
துலங்குகிறது 
இருளில் நிறைந்துள்ள 
இனிமை

இழப்பென்பது எப்போதுமே 
துயராயிருக்க வேண்டியதில்லை...
சில நேரங்களில் 
விடுதலையாகவும் இருக்கக்கூடும் ...

- கா.சிவா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.