கடின மலையின்
உச்சி நோக்கிய
என் பயணம்....
தோள் கொடுத்து தாங்குவார்
தட்டித்தந்து தேற்றுவார்
எவருமின்றி...
பாதையில் பாறைகளை
உருட்டிடவும்
பாதங்களில் பாரத்தை
ஏற்றிடவும் மட்டும்
தயக்கமின்றி..
இடறி விழாமல்
இருக்க நான் பற்றுவது
ஒரு பாறையாகவோ
சிறு கிளையாகவோ
எனை நோக்கி
நீளும் கரமாகவோ
இருக்கலாம் ..
விரல்பற்றும் விரல்கள்
நீங்கள் வரையும்
விதிகளுள் விழாமல்
இருப்பதை விடவும்
நான் விழாமல்
இருப்பதுவே
எனக்கு முக்கியம் ....

- அருணா சுப்ரமணியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.