நம்பிக்கையின் உந்துதலில்
கைக்கொண்ட சாவியை
இதுகாறும் என்னை
பிணைத்து வைத்த
பூட்டின் வாய் நுழைத்து
தாழ் திருப்ப
திறந்து கொண்டன
புதியதோர் உலகின்
கதவுகள்...
நெடுநாள் காத்திருப்பின்
விளிம்பில் பெற்ற
சுதந்திரத்தின் சுவாசம்
மனம் நிறைத்து
முன்னேற
என்னுள் எங்கேயோ
மற்றுமொரு
கதவு மூடிக்கொண்டது...

- அருணா சுப்ரமணியன்

More articles by அருணா சுப்ரமணியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.