கீற்றில் தேட...

சொற்களில் அத்துனை
வகைகளிருக்க நீ
என்னை நோக்கி
வீசுவது என்னவோ
சிவப்பில் தோய்த்த
கூரான
தடித்தவைகளே..
அவற்றையும்
பஞ்சுப்பொதிகளென
உள்ளங்கைகளில்
பிடித்துச் சேர்க்கிறேன்..
விரல்களின்
ரணங்களுக்காகவேனும்
ஒற்றை
முத்தச் சொல்லை
வீசிச்செல்வாயா?

- அருணா சுப்ரமணியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.