ரேஷன் வரிசையில் நின்றதில்லை..
வரிசையில் நின்று பேருந்தில்
ஏறுவது இழுக்கு...
தியேட்டர் வாசலில் 50 ரூபாய்
அதிகம் கொடுத்தாவது
டிக்கட் வாங்குவேன்
வரிசையில் நிற்பதாவது...
பால் வாங்க வரிசையில் நிற்கையில்
கடைக்காரர் பெண் ஜன்னலோரம்
வந்து தொலைந்தால் மானம் போகும்
பெரும்பாலும் தவிர்ப்பேன்...
வேலைக்கு விண்ணப்பம் வாங்கும்
போது கூட அந்த நீண்ட வரிசை எனக்குள்
சலிப்பைத்தான் வியர்த்தது.
வரிசைக்கு பயந்து வாசலோடே திரும்பிய
கோவில் தரிசனங்கள் தான் அதிகம்...
இருந்தும் ஏனோ எது பற்றியும்
கவலையிலல்லாமல்
மதுக்கடை வாசலில் மட்டும் 48 வது ஆளாக
இருந்தாலும் நின்று விடுகிறேன்.
ஹெல்மெட் போட்டுக் கொள்வதில்
வேகமாய் வரிசை முன்னேறுகிறது என்பது
வரிசையின் நம்பிக்கை...
எனதும் கூட....!

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.