man 247சித்தப்பா பாரம்பரியமானவர்...
ஏறு தழுவி
மஞ்சு விரட்டி
இளவட்டக் கல் தூக்கி
சித்தியை கை பிடித்தவர்.

திண்ணையில் அமர்ந்தபடி
மணிக்கணக்கில் பேசுவார்...

எந்தையும் உந்தையும்
எம்முறை கேளீர்
என்ற தங்கை
ஓடுகாலியாகிப்போனாள்....

கல்லூரி
மாணவன் தலைவனாய் தம்பி
துணங்கை கூத்தாடியபடி
உதவாக்கரை ஆகிப்போனான்....

செங்கோல் களவு போனபின்
சித்தப்பா உருவியது போக
மிச்சமிருந்த
சித்தியின் சிலம்பும்
மாணிக்கப் பரல்களும்
தெறிக்கவேயில்லை
டிஜிட்டல் இந்தியாவில்...

வீட்டுக்குள்ளே முடங்கியபடி
சித்தி....

பாரம்பரியம் பேசியபடி
சொச்சமிருந்த
வாழ் நாளை கழித்திருந்தார்
சித்தப்பா
மாதவி வீட்டு திண்ணையில்.....

- அ.ப.சிவா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.