புழுங்கும் மௌனச் சுவற்றுக்குள்
நான் தனித்திருக்கிறேன்..

நுழைய முயன்ற
மெல்லிய இசை ஒன்று
வெறுமையின் சுவற்றில் அலகு மோதிச் சரிகிறது

என் விலக்குநாட்கள் யாசிக்கும்
உன் புன்னகையின் துளி ஒன்றை, ஏனோ
நான்காம் நாளில் எடுத்து வருகிறாய்
சமாதானத்தின் கைக் கோர்க்க

ததும்பும் அட்சயப்பாத்திரம் ஒன்று
இடறிக் கவிழ்கிறது
குப்பைக்கூடையில்,
வண்ணம் வெளிறியச் சொற்சிதறல்களாய்
உடைந்த இசைக்குறிப்புகளாய்
பயன்படுத்தப்பட்ட ஆணுறைககளாய்

******
- செ.சுஜாதா, பெங்களூர்.

Comments

1 comment

1
பாரதி அட்சயா
பெண்ணின் வலியை பகிரவும் ஒரு துணிவு வேண்டும். அது உங்களிடம் நிறைய இருக்கிறது. பதிவு செய்யுங்கள் தொடர்ந்து.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.