ஆளுவோரின் இலவசங்கள்
அன்றாடம் காய்ச்சிகளுக்கு
வரப்பிரசாதம்..
ஏழ்மையை விரட்டும்
எளிய உத்தி..
சமத்துவம் பேணும்
சாமர்த்திய வழி..
என
ஆவேசப் பேச்சு
அறிக்கைகள்
மின்னணுப் பதாகைகள்
ஊடக விளம்பரங்கள்

இலவசங்கள்..
அவை இலவசங்கள் இல்லை
எங்கும் எப்போதும் எவையும்
இலவசங்கள் ஆவதில்லை

இலவசங்களின் முதல்பலி
மக்களின் சுயமரியாதை..
அதன்
பகாசூரப் பசிக்குத் தீனி
புதுப்புது வரிகள்

ஆளுவோருக்கு
அவை அமுதசுரபிகள்
ஆறு கொடுத்தால்
நூறு எடுக்கலாம்

இலவசங்களுக்குக்
கையேந்திக் கையேந்தி..
கூனிக் குறுகிக்
குப்புறக் கீழே
வீழ்ந்து கிடக்குது
குடிமக்களின் மாண்பு

கேள்வி கேட்க,
எதிர்க்குரல் எழுப்ப,
உரிமைக்குப் பேராட
எதற்கும் திராணியற்று

இலவசங்களால்
கொள்ளைபோகும்
பல கோடிகளைப் பறிகொடுத்து
சிதறிய சில்லறைகளைத்
தேடிப் பொறுக்குவதில்
நம்
தேசம் தொலைகிறது

Comments

1 comment

1
சோமா
இலவசங்களால்
கொள்ளைபோகும்
பல கோடிகளைப் பறிகொடுத்து
சிதறிய சில்லறைகளைத்
தேடிப் பொறுக்குவதில்
நம் தேசம் தொலைகிறது....நன்று...இன்னும் எழுதுங்கள்.. இன்னும் ஆழம் தோய்த்து..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.