*
பேனாவிலிருந்து கையில் கசிந்து விட்ட
மையைத் துடைத்துக் கொள்ள
காகிதம் தேடுகிறேன்
உனது மேஜையில் கையருகே
பாதி படித்த நிலையில் வைத்திருந்த
கவிதைத் தொகுப்பொன்றின்
பக்கத்தை சட்டென்று கிழித்து
கொடுத்து விட்டாய்
அவசரமாய் துடைத்த பின் உரைத்தது
உள்ளங்கை முழுக்க
கவிதையொன்று வார்த்தைகளாகி
உருக் குலைந்ததும்
முகமில்லா ஒரு துயரின் உருவம்
ஆள்காட்டி விரலில்
துருத்திக் கொண்டு உட்கார்ந்திருப்பதும்
******
--இளங்கோ (
எது மணிதம்...
மண்ணின் மைந்தர் என மார்தட்டிக்கொல்வதா
இல்லை
மதம் என்னும் தீயில் குளிர் காய்வதா?
மற்றவரை மதிக்க மறுக்கும் நமக்கு
எதற்க்கு
மணிதன் என்னும் பட்டம் மட்டும் ?....
மண்ணின் மைந்தர் என மார்தட்டிக்கொல்வதா
இல்லை
மதம் என்னும் தீயில் குளிர் காய்வதா?
மற்றவரை மதிக்க மறுக்கும் நமக்கு
எதற்க்கு
மணிதன் என்னும் பட்டம் மட்டும் ?....