*
அப்படியொரு சாயலை
இதற்குமுன் எழுதியதில்லை
நெளியும் புன்னகையில் துளிர்க்கிறது விஷ வன்மம்
எதிர்ப்பட்டு கடக்கும் நொடியை
நூறுத் துண்டுகளாய் நறுக்கத் தோன்றுகிறது
வாய்ப்பதில்லை ஒரு நிமிடம்
நொறுங்கும் அகாலத்தின் வெறுமையை
நின்று கவனிக்கும் பொறுமை இழக்கப் பழகுகிறேன்
எழுது விரல் ரேகைகளை நெருடி நீவி
உருகி வழியும் வெயில் நீரைப் பருக நீளும் நாக்கில்
கரைகிறது அவசரமாய் உனது பகல்
பொசுங்கும் நின வாடை மௌனமொன்று
நாசிக்குள் நுழைந்து வெளியேறுகிறது
தகிக்கும் கானலில் மிதந்தபடி
அப்படியொரு சாயலை எப்போதும் எழுதியதில்லை
வேறொன்றாய் அமிழ்கிறது
சதுப்பென குழையும் நினைவில் ஒவ்வொன்றாய்
*******
--இளங்கோ (
கீற்றில் தேட...
நெளியும் புன்னகையில் துளிர்க்கும் விஷ வன்மம்
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்